உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இல்லை என்ற முடிவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று இக்குழு தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி மனு தள்ளுபடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்த பெண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உள்விசாரணை குழுவின் முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த முடிவினால் நீதித்துறை மீதான நம்பிக்கை எனக்கு குறைந்துள்ளது. ஏனென்றால் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு குறைவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விசாரணை குழுவிற்கு வழக்கறிஞருடன் தன்னை ஆஜராக அனுமதிக்குமாறு இவர் முறையிட்டிருந்தார். அதற்கு விசாரணை குழு அனுமதி மறுத்தால், புகார் அளித்த பெண் உள் விசாரணை குழுவின் முன் ஆஜராகவில்லை எனக் கூறி விசாரணையிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்