ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டை பெற கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்படலாம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ராம் மாதவ், “கடந்த முறை மெஜாரிட்டி தேவையான இடங்களை காட்டிலும் அதிகமாகவே நாங்கள் பிடித்திருந்தோம். இந்த முறை ஆட்சி எதிர்ப்பு மனநிலை காரணமாக அதேபோல், மெஜாரிட்டிக்கான தொகுதிகளை பெற முடியாமல் போகலாம்.
ஆட்சி அமைக்க தேவையான 271 இடங்களை பாஜக மட்டுமே பிடித்துவிட்டால் மகிழ்ச்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் பெறும் இடங்களை சேர்த்தால் கூடுதல் பலம் கிடைக்கும். வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்காளம், ஒடிசா மாநிலங்களில் கிடைக்கும் கூடுதலாக இடங்கள், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இழக்கும் இடங்களை ஈடு செய்யும்.
இந்தியாவில் கிழக்கு பகுதியில் கட்சியை வலுவாக ஊன்றிவிட்டோம். அதேபோல், தென்னிந்தியாவிலும் வலிமையடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று பேசினார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை பிடித்து மிகப்பெரிய கட்சியாக உருவானது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்