அமெரிக்காவில், பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளான நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியாக வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கும் படிக்கும் 22 வயது மாணவரான டிரிஸ்டான் ஆண்ட்ரு டெர்ரல் என்பவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். உடனடியாக அங்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர்கள் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்து கைகளை தூக்கிய படி மாணவர்கள் பதற்றத்துடன் மாணவர்கள் வெளிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்