சீமைக்கருவை மரங்களை வெட்ட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக இருவாரங்களுக்கு ஓருமுறை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவருகிறது இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சீமை கருவை மரங்களால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அவர், உரிய வழிமுறைகளை ஏற்படுத்தாமல் அவற்றை அகற்றுவது சரியாக இருக்காது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். சீமை கருவேல மரங்களை வெட்டுவதை காடு அழிப்பு நடவடிக்கையாக கருதவேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஐஐடி நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை வெட்ட வரும் மே 11-ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்தும், வழக்கில், ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மே 11-ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!