உலக புத்தக தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பலரும் புத்தகங்களுடன் எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், வாசிப்பின் ஆனந்தத்தை அனைவரும் உணர வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
புத்தகங்களே ஒரு மனிதனை சிந்திக்கும் தன்மையுள்ளவனாகவும், பகுத்தறிவுமிக்கவனாகவும் மாற்றுகிறது. மிகப்பெரிய தலைவர்களில் பலரும் கூட எவ்வளவு பெரிய வேலைப்பளுக்கு இடையிலும், தினசரி அரைமணி நேரமாவது புத்தங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் பெரிய அளவில் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அப்படி வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் கூட, டிஜிட்டலில் அதனை படிப்பதாகவும், புத்தங்களை பக்கம் புரட்டி வாசிக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அதில் ஏற்படுவதில்லை என்று புகார் உள்ளது.
இந்நிலையில் உலக புத்தக தினமான நேற்று ஏராளமான இளைஞர்கள், தாங்கள் புத்தங்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, வாசிப்பின் மீதான தங்கள் ஈர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். எழுத்தாளரும், விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான ரவிக்குமார், “பொது நூலகம் ஒன்றுக்குச் செல்லுங்கள். அங்கிருந்து ஒரு செல்ஃபி எடுத்து இங்கே பின்னூட்டமாகப் போடுங்கள். ஒரு புத்தகத்தைப் பரிசாகப் பெறுங்கள்” என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரின் பின்னூட்டத்தில் ஏராளமானோர் தாங்கள் புத்தகம் படிக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். ஆன்லைன் கேம்ஸ், மொபைல் என ஏராளமான வசதிகள் இருக்கும் இக்காலத்திலும் புத்தக ப்ரியர்களாக பலர் இருப்பது நேற்று வெளிப்படையாகவே தெரியவந்தது. ஒரு பண்பட்ட சமூகம் உருவாக புத்தகங்களே மிகப்பெரிய சாட்சியாக இருக்கின்றன. அந்தவகையில் இன்றைய இளைஞர்களும் புத்தகத்தின் மீது தனிக்காதல் வைத்திருப்பது ஒரு நல்ல போக்கையே காட்டும் வகையில் உள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'