பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து கோரிக்கை குறித்து பேசிய பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதாக கூறினார். பொன்பரப்பியில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு, பட்டியலினத்தவர் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டவர்கள் அளித்த மனுக்கள் சத்யபிரதா சாஹூவிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி நாளை மறுநாள் அரியலூரிலும், சென்னையிலும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நத்தமேடு பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மற்ற சமூகத்தினரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இருதரப்பு மோதல் ஏற்பட்டு, பானை சின்னம் வரையப்பட்டிருந்த பலரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!