தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது. உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 2 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி கடைசி நாள். ஜூன் 3-ம்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் ஜூன் 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்கும் இணையதளம் முகவரி நாளை அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்