மூணார் அருகே யானைகள் சரணாலயம் கட்டப்படும் என கேரள வனத்துறை அறிவித்துள்ளது
சமீப காலமாக கேரளாவின் மூணார் அருகே ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் யானைகளால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. யானைகளின் வழித்தடம் என்று சொல்லக்கூடிய அப்பகுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்ட கேரள வனத்துறை அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரணாலயம் கட்டப்பட்டால் யானைகளை பாதுகாக்க முடியுமென்றும், யானை - மனித மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய தலைமை வனவிலங்கு காப்பாளர், சுரேந்திரகுமார், ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் 6கிமீ சுற்றளவில் யானைகள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.அப்பகுதிக்குள் வரும் குடியிருப்புகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும். சரணாலயம் யதார்த்தமாக உருவாக்கப்பட்டால் யானைகளுக்கு இயற்கை வாழிடமாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
2002-2003ம் ஆண்டுகளின் போது மூணார் அருகேயுள்ள சிணகுகண்டம் பகுதியில் 80 ஏக்கர் அளவில் பொதுமக்களுக்கு குடியிருப்பு பகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் யானைகளின் வழித்தடத்தை அப்பகுதி பெருமளவில் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகமாயின. மூணார் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிக்குள் 2010 வரை யானை தாக்கி 28 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் மாற்று இடத்தில் குடிபெயர்ந்தனர். இந்நிலையிலேயே அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட கேரள வனத்துறை முடிவெடுத்துள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்