எமிரேட்ஸ் விமான ஊழியர்கள் இனவெறியுடனும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாகுபலி படத் தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள ’பாகுபலி 2’. பிரபாஸ்,ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் துபாய் சென்றது. பின்னர் எமிரேட்ஸ் விமானத்தில் ஐதராபாத் திரும்பியது. அப்போது விமான ஊழியர்கள் இனவெறியுடனும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாகுபலி 2 படத் தயாரிப்பாளர் ஷோபு கூறியுள்ளார்.
இதுபற்றி டிவிட்டரில், ‘எமிரேட்ஸ் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். பி3 கேட்டில் இருந்த விமான ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். தேவையில்லாமல் எங்கள் படக்குழுவை துன்புறுத்தியது. ஒரு ஊழியர் இனவெறியுடன் நடந்துகொண்டார். எமிரேட்ஸ் விமானத்தில் அடிக்கடி பயணிக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக இதுபோன்ற நடத்தைகளை எதிர்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை