பான்கார்டு வாங்க ஆதார் எண் கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டபோது, எம்.பிகள் யாரும் அதை எதிர்க்காத போது, தாங்கள் ஏன் தலையிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆதார் அடையாள அட்டையுடன் பான் எண்ணை ஒருங்கிணைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதைக் கட்டாயம் ஆக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையில் ’ஆதாரை கட்டாயமாக்க மாட்டோம் என மத்திய அரசு பல முறை வாக்குறுதிகள் அளித்துள்ளது. ஆனால், மறைமுகமாக அதை செயல்படுத்த முயற்சிக்கிறது’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டபோது எம்பிகள் யாரும் அதை எதிர்க்காத போது தாங்கள் ஏன் தலையிடவேண்டும்? நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதை தடை செய்ய முடியாது என்று தெரிவித்தனர். விசாரணையின் போது நாட்டில் வரி ஏய்ப்பு இருப்பதாகவும், மக்கள் வரி செலுத்த விரும்பாதது அவமானகரமானது என்றும் நீதிபதிகள் கூறினர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்