தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இதையடுத்து யோகி ஆதித்யநாத்திற்கும் மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை காலை 6 முதல் 72 மணி நேரத்திற்கு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நேரத்தில் அவர்கள் நேரடியாகவோ தொலைக்காட்சியிலோ பேட்டி அளிப்பது, வேறு ஏதாவது முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுவரை எச்சரிக்கை மட்டுமே விடுத்துவந்த நிலையில் தற்போது இரண்டு பேருக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!