அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்
அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்

’வாக்களிப்பது நமது கடமை, அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது
ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்த, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘’வாக்களிப்பது நமது கடமை, அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com