நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக ஊடகங்களும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் அதிமுக கூட்டணிக்கு 6-8 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், திமுக கூட்டணிக்கு 31-33 இடங்கள் கிடைக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் 5 மண்டலங்களாக நடத்தப்பட்ட கணிப்பில், எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்பதற்கு 41.90% திமுகவிற்கும், 27.07% அதிமுகவிற்கும், 4.71% அமமுகவிற்கும், 5.68% மக்கள் நீதி மய்யத்திற்கும், 4.19% நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தமிழகத்தில் பிடித்த அரசியல் தலைவர் யார் ? என்ற கேள்விக்கு, 31.01% பேர் மு.க.ஸ்டாலினையும், 9.66% பேர் எடப்பாடி பழனிசாமியையும், 6.16% பேர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 5.54% பேர் சீமானையும், 4.65% பேர் கமல்ஹாசனையும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் ? என்ற கேள்விக்கு 22.43% பேர் நரேந்திர மோடியையும், 53.20% பேர் ராகுல் காந்தியையும் தெரிவித்துள்ளனர்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்