ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு தண்டனை என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் மார்ச் 15ம் தேதி நீக்கியது. அத்துடன் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஸ்ரீசாந்திற்கான தண்டனை குறித்து பிசிசிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு நீதிபதி டி.கே.ஜெயின், மூன்று மாதத்திற்குள் முடிவு செய்வார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி