பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக ஸ்விகி ஊழியர் மீது பெண் ஒருவர் புகார் கூறிய நிலையில், அப்பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை ஸ்விகி நிறுவனம் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் நேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த வியாழக்கிழமை ஸ்விகி ஆப் வழியாக உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை வீட்டிற்கு கொடுக்க வந்த ஸ்விகி ஊழியர், நேகாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அவர் கொடுத்த உணவை சாப்பிடவே நேகாவிற்கு வெறுப்பாக இருந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட நேகா, சம்பந்த்தப்பட்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் இவ்விவகாரத்தில் மென்போக்கை கையாண்ட ஸ்விகி நிறுவனம், சாரி கூறியதோடு, அப்பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது. இதனால் அப்பெண் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து நேகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!