சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தி புதியதல்ல என்று காரத்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ள நிலையில் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சொத்துக்கள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் விளக்கம் அளித்துள்ளார். ’’சொத்துக்களை முடக்கிய விவகாரம் புதிய செய்தி அல்ல. ஆறு மாதத்துக்கு முன்பே அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கிவிட்டது. பழைய உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது, அவ்வளவுதான்’ என்று கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித் துள்ளார்
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!