தான் ஒவ்வொரு போட்டியை விளையாடுவதும் கடினமான ஒன்றுதான் என பெங்களுர் அணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2019 தொடரின் 7வது போட்டி இன்று நடைபெறுகிறது இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களுரில் உள்ள சின்னசாமி மைதனாத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதால், சொந்த மண்ணில் பெங்களுருவை வெற்றி பெறுவது சற்று கடினம் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையிடம் பெங்களூர் அணி 70 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்ததால், இந்தப் போட்டியை கவனத்துடன் விளையாடவுள்ளனர். மும்பையும் முதல் போட்டியில் தோற்றுள்ளதால், இந்தப் போட்டியை வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் உள்ளனர்.
இந்தப் போட்டி தொடர்பாக பேசிய டி வில்லியர்ஸ், “எனக்கு ஒவ்வொரு போட்டியை விளையாடுவதும் கடினமானது தான். நீங்கள் பலத்துடன் விளையாட விரும்புவீர்கள். பின்னர் நீங்கள் களைத்துவிடுவீர்கள். இங்கு யாரும் மிகச் சிறந்தவர்கள் அல்ல. பும்ரா ஒரு சிறப்பான பவுலர். ஆனால் அவரை இந்தப் போட்டில் சற்று நிறுத்தி வைத்து பந்துவீச அனுப்புவார்கள். ஏனென்றால் இந்த மைதனாத்தின் பவுண்டரிகள் பெரியவை அல்ல. இந்தச் சிறிய மைதானம் என்பதால் அனைத்து பவுலர்களும் இங்கு சற்று அழுத்தத்துடன் தான் விளையாடுவார்கள்” என்றார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி