
பெரம்பலூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் வேட்பு மனுவை பெற தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் வேட்பு மனுவை பெற தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 3 மணிக்கே வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் 3.20 மணிக்கு தாமதமாக வந்ததால் செய்தில் குமாரின் மனுவை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவினை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அத்துடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்பட உள்ளது