Published : 26,Mar 2019 10:08 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிறைவு பெற்றது வேட்புமனுத் தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை, மற்றும் 18 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவினை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அத்துடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்பட உள்ளது.