சமூக சேவையில் இருக்கும் நபர் ஒருவர் தனித் தொகுதி எது..? பொதுத் தொகுதி எது எனத் தெரியாமல் வேட்புமனுத் தாக்கல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திருநின்றவூரை சேர்ந்த ராமன் (50) என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். அவரது மனுவை அதிகாரிகள் சோதனை செய்தபோது சாதி சான்றிதழில் பொது பிரிவை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் ‘இது தனித் தொகுதி இதில் நீங்கள் போட்டியிட முடியாது’ என்று தெரிவித்தனர். அதற்கு அவர் நான் முதன்முறையாக போட்டியிடுகிறேன். இதுவரை ஏராளமான சமூக சேவைகள் செய்து வருகிறேன். பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளேன். டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் கையோடு கொண்டு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எவ்வளவு கூறியும் அதனைக் கேட்காத ராமன், பிடிவாதமாக நான் வேட்பு மனுத் தாக்கல் செய்தே தீருவேன் எனத் தெரிவித்து விட்டு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது, வேட்பு மனுவை வாபஸ் பெற்றால் டெபாசிட்டாக கட்டிய தொகை திரும்ப கிடைக்கும். வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் டெபாசிட் தொகை கிடைக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கும் அந்த நபர் நான் மனுவை வாபஸ் வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார். சமூக சேவையில் இருக்கும் நபர் தனித் தொகுதி எது? பொதுத் தொகுதி எது எனத் தெரியாமல் இருந்துக்கொண்டு வேட்பு மனுத் தாக்கல் செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!