பத்திரிகையாளர்களின் சமூகப் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்திரிகையாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். செய்தியாளர்கள் பலருக்கு குறைந்த ஊதியமே கிடைப்பதாகவும், அதிக நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதால், உடல் நலமும் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பிரச்னைகளை துணிச்சலாக வெளியே கொண்டு வருவதாலும், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பது போல, தமிழகத்திலும், பத்திரிகையாளர்களின் நலன் காக்க, நல வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் சமூக பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், நலவாரியத்தை அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!