எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து, 'போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களை சிங்கப்பூர் அரசும் நிறுத்தியுள்ளது.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. பத்து நிமிடத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத் தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப் பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு விபத்துமே ஒன்று போலவே நடந்துள்ளதாலும் இரு விமானங்களுமே போயிங் ரகத் தை சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
இதையடுத்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, கேமேன் தீவுகள் உள்ளிட்ட நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதன் பாதுகாப்பு அம்ச ங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த ரக விமானங் களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இந்த ரக விமானங்களை இயக்க விமானிக்கு குறைந்தது ஆயிரம் மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
இதுபற்றி ஜெட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘’எங்கள் நிறுவனத்தில் 5 போயிங் விமானங்கள் உள்ளன. அவை அனைத்தும் இப்போது நிறுத்தப்பட்டு விட்டது. போயிங் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூரும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்க உத்தரவிட்டுள்ளது.
எத்தியோப்பிய விபத்து குறித்து போயிங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ’’விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கத் தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளது.
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?