திருவாரூர் அருகே உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ளவற்றில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும், மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சுமார் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கானூர் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கார் ஒன்றில் சோதனையிட்டதில், பையில் 50 லட்சம் ரூபாய் இருந்ததைக் கண்டனர். அதனைப் பறிமுதல் செய்து காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது உள்ளிட்டோர் தங்களது பேருந்துக்கு பாடி கட்டுவதற்காக பணத்தை திருச்சிக்கு கொண்டுச் செல்வதாக கூறினர். ஆனால், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai