உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக ஒரு இந்து பெண் ஒருவர் உரையாற்றினார்
பாகிஸ்தானில், நாடாளுமன்ற மேல்சபையில் சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார் கிருஷ்ண குமாரி கோல்ஹி. நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் நாடாளுமன்ற மேலவையின் ஒரு நாள் தலைவராக நியமிக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் முதன்முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றார் கிருஷ்ண குமாரி.
40 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி தொழிலாளர்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் போராடியவர். இது குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ண குமாரி, நாடாளுமன்ற மேலவை தலைவரின் இருக்கையில் நான் அமர்ந்தது பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் குறித்து பேசிய மேலவை எம்பி பைசல், மகளிர் தினத்தன்று பெண்களை போற்றும் விதமாகவும், கவுரவம் செய்யும் விதமாகவும் அவைத்தலைவரின் இருக்கையில் ஒருநாள் அமர அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் முதல்முறையாக ஒரு இந்து பெண், நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றியது பெருமையாக பார்க்கப்பட்டு வருகிறது. இது பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் உரிமையை நிலைநாட்டும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!