தனுஷ் தங்களின் மகன் என கூறி மதுரை மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த நிலையில் மேலூர் தம்பதியினர் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் ஒரு பகுதியாக தனுஷின் அங்க அடையாளங்கள் சோதிக்கப்பட்டன. மரபணு பரிசோதனை தேவை என மேலூர் தம்பதி கோரிய நிலையில், தனுஷ் தரப்பு அதற்கு மறுத்துவிட்டது. பல கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. தனுஷின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை, மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்