பென்னாகரம் அருகே வங்கியில் கல்வி கடன் பெற்று படித்த பட்டாதாரி வங்கியில் படித்த சான்றிதழை ஒப்படைப்பதாக வங்கி முன் துண்டறிக்கை ஒட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்தலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் சுரேந்திரன் கடந்த 2010-11 கல்வியாண்டில், பட்டம் முடித்து, கல்வியியல் (பிஎட்) படித்துள்ளார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் இவர், படிப்பதற்கு வங்கி கடன் கேட்டு, ஏரியூரில் உள்ள வங்கியில் விண்ணப்பித்துள்ளார். அந்த வங்கியும் சுரேந்திரனின் படிப்பிற்கு கல்வி கடனாக ரூ.35,000 வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, சுரேந்திரன் தனது மேற்படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கல்வி கடன் வழங்கிய வங்கியில் இருந்து, பணம் கட்டச் சொல்லி, வழக்கரிஞர் மூலம் பட்டதாரி சுரேந்திரனுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்ட பட்டதாரி, வங்கிக்கு நேரில் சென்று, தற்பொழுது வேலை இல்லை. பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது, கட்டுவதாக சொல்லி கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வங்கி மூலம் வழக்கரிஞர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கல்வி கடன் தொகை கட்டத்தவறினால், சொத்தகளை பறிமுதல் செய்வதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பட்டதாரி சுரேந்திரன், தனக்கு போதிய வருவாய் இல்லை. அதனால், நான் பணம் திருப்பி செலுத்தும் வரை தன்னுடைய அசல் சான்றிதழ்களை வங்கியில் வைத்துக் கொள்ளவும், எனக்கு சொத்தே இந்த கல்வி சான்றிதழ்கள் தான். அதனால் இவற்றை வங்கியில் ஒப்படைக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் வங்கி நுழைவாயில் துண்டறிக்கை ஒன்றையும் ஒட்டியுள்ளார். இச்சம்பவம் ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!