சசிகலாவை ஒதுக்க ஓபிஎஸ் நிர்ப்பந்தம் காரணமா? ஜெயகுமார்

சசிகலாவை ஒதுக்க ஓபிஎஸ் நிர்ப்பந்தம் காரணமா? ஜெயகுமார்
சசிகலாவை ஒதுக்க ஓபிஎஸ் நிர்ப்பந்தம் காரணமா? ஜெயகுமார்

கட்சியின் நலன் கருதி அனைவரும் முடிவு எடுத்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தோம் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து புதியதலைமுறையிடம் பேசிய அவர், ’ஓபிஎஸ் நிர்ப்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை’என்றார். தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி என ஓபிஎஸ் கூறியதற்கு கருத்து தெரிவித்த அவர், ’ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்று கூட ஓபிஎஸ் கூறுவார். ஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த குழு அமைப்பதில் எந்த தாமதமும் இல்லை’ என்று தெரிவித்தார். முன்னதாக, சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால் மட்டுமே, அதிமுக இரு அணிகள் இணைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்தே டிடிவி.தினகரனை ஒதுக்கும் முடிவை அமைச்சர்கள் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அமைச்சர் ஜெயkகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com