கோவா பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் பர்தா அணிந்துகொண்டு நுழைந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
மலைகள், அரபிக்கடல், கோட்டைகள் என இந்தியாவின் சுற்றுலாப் பகுதிகளில் முக்கியமான இடமாக உள்ளது கோவா. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவாவின் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் ஆண் ஒருவர் இஸ்லாமிய பெண் போல பர்தா அணிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது அரசு ஊழியரான விர்ஜில் பெர்னாண்டஸ், இஸ்லாமிய பெண்போல பர்தா அணிந்துகொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு கோவா சென்ட்ரல் பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். தான் பர்தா அணிந்துள்ளதால் யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு, அங்குள்ள பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்துள்ளார். விர்ஜிலின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு காவலில் இருந்த போலீசார் உடனடியாக விர்ஜிலை கைது செய்தனர். அவர் மீது ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்