கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. சுந்தர் பொறுப்பேற்றப்பின் கூகுள் நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதா? சுந்தர் எத்தகைய தலைவர்? என்பது குறித்து கூகுளில் பணிப்புரியும் ஊழியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிதம் பேர் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவிதம் குறைவாகும். எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். இந்த மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவு ஆகும்.
ஊழியர்கள் சுந்தர் பிச்சை மீதான தலைமையின் நம்பிக்கையை இழந்ததற்கு காரணம் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தில் எழுந்த பாலியல் புகாரும், அதற்கான சுந்தரின் நடவடிக்கைகளும்தான் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!