இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனியின் காலை ரசிகர் ஒருவர் தொட்டு வணங்கிய சம்பவம் நடந்துள்ளது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. போட்டியின் இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவுடன் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் போடப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ரசிகர் ஒருவர் வீரர்கள் விளையாடும் பகுதிக்குள் நுழைந்தார். பிட்சை நோக்கி ஓடிவந்த அந்த ரசிகர், அங்கு நின்றிருந்த தோனியின் காலைத் தொட்டு வணங்கினார். மேலும், தோனியுடன் அந்த ரசிகர் கைகுலுக்கவும் செய்தார். அவரைத் துரத்தி வந்த மைதான பாதுகாவலர்கள் பாதுகாப்பாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. நாற்பது பந்துகளைச் சந்தித்த தோனி, 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?