விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை பேட்ட திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.
இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாய்பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.35லட்சத்தை காசோலையாக தருவதாகவும், மீதித்தொகையை 4 வாரத்துக்குள் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை