மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தில் அதிமுகவின் போராட்டம் தொடரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரஃபேல் பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக எம்பிக்களின் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையின் போது யாரோ ஒரு எம்பி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பரினை தூக்கி எரிந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இருந்து அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க அதிமுக எம்.பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தில் அதிமுகவின் போராட்டம் தொடரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் கர்நாடகத்தில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகம் இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்