குடிநீர்கூட கிடைக்காமல் தவித்து வரும் அலக்கட்டு மலைக்கிராம மக்கள், தங்களின் சிரமத்தை அரசு புரிந்து கொண்டு உடனே உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அலக்கட்டு மலைகிராம். அடர்ந்த வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் கரடுமுரடான பாதையைக் கடந்தால்தான் அலக்கட்டு மலைகிராமத்தை அடைய முடியும். சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் இந்தக் கிராமம் வானம் பார்த்த பூமி.மானாவாரி விவசாயம் மட்டுமே இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது.
பாறைக்களின் இடுக்குகளில் வரும் ஒரு சுனையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டே இந்தக் கிராம மக்கள் தங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வந்தனர். அதனை அறிந்த வனத்துறையினர் இவர்களின் தேவைக்காக கிணறு வெட்டி கொடுத்ததோடு ஒரு நீர்த்தேக்க தொட்டியும் கட்டி அதன் உதவியால் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின்மோட்டார் பழுதாகியுள்ளது, இந்த மின்மோட்டரை பழுது பார்க்காமல், காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து மின் கம்பத்திலிருந்து வரும் மின் கம்பியையும் துண்டித்துள்ளனர். இதனால் மீண்டும் அலக்கட்டு கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று, கிணாற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இந்த அலக்கட்டு மலைக்கிராம மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆகவே கிணற்றுக்கு உடனடியாக மின்மோட்டர் வைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த மலைக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்