உத்தரப்பிரதே மாநிலத்தில் கணவர் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பஸ்தி மாவட்டத்தில் ஷப்னம் மிஷன் என்பவர், தனது மனைவியிடம் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தலாக் விவாகரத்து முறைக்கு தடை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் முத்தலாக் முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒன்றரை ஆண்டுகளுக்குள் முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதால் இந்த நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அரசு இதில் தலையிடத் தேவையில்லை என்றும் முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி