கும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து பணியில் சேர்வதற்காக தமிழகம் வந்தார் சுதா. சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் சென்ற அவர் ஆட்டோவை வாடகைக்கு பிடித்து தங்குவதற்கான இடத்திற்கு செல்ல முயன்றுள்ளார். அந்த ஆட்டோக்காரர் சுற்றுப்பாதையில் செல்வதை உணர்ந்த சுதா உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடம் அருகே சுதாவை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதன்பின் அந்த நேரத்தில் அங்கு பைக்கில் வந்த 4 இளைஞர்கள் சுதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix