பிடெக் மாணவி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது!

பிடெக் மாணவி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது!
பிடெக் மாணவி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது!

டியூசன் சென்ற பிடெக் மாணவி, கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆக்ராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பி.டெக் படித்துவருகிறார். இவர் தனது ஸ்கூட்டியில் கடந்த சனிக்கிழமை டியூசனுக்கு சென்றுகொண்டிருந்தார். பிசியான சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோதும், இரண்டு பேர் அவரது வாகனத்தை மறித் தனர். மாணவியை மிரட்டி அவரது ஸ்கூட்டியிலேயே ஏறிகொண்டு அந்த மாணவியை பின்னால் உட்கார வைத்தனர். 

பின்னர் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தனது நண்பர்கள் இருவரை வரவழைத்தனர். பின்னர் நான்கு பேரும் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின் அங்கு மாணவியை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். 

இதையடுத்து அங்கு வந்த சிலர் தற்செயலாக, மாணவி காயத்துடன் அலங்கோலமாக மயங்கிக் கிடந்ததைக் கண்டு போலீசுக் கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்துவந்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவியின் தந்தை அளித்த புகாரை அடுத்து, காய்கறி வியாபாரம் செய்யும் ராகுல் நிஷாத் (23), கன்னையா லால் (19) ஆகி யோரை கைது செய்தனர். இருவரும் திருமணம் ஆனவர்கள். இவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலையில் பட்டப்பகலில் மாணவி ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com