ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மனுதாரர் புகழேந்தியிடம், நிர்வகிக்க கோரும் ஜெயலலிதாவின் சொத்துகள் எவை என கேள்வி எழுப்பினர்.
கடந்த 1996-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துகளையா? அல்லது 2016ம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள அவரது அனைத்து சொத்துகளையுமா என விளக்கம் கேட்டனர். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்கள் பட்டிலையும், 2016ம் ஆண்டு தேர்தலின்போது வேட்புமனுவில் தமது சொத்துகள் என ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்ட பட்டியலையும் வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் புகழேந்தி, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சொத்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டால், வருமானவரித்துறையை வழக்கில் சேர்க்கவும் தயாராக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!