2017 ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆயிரத்து 156 குழந்தைத் திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் நலத்திற்கான இந்திய ஆணையம் மற்றும் யுனிசெப் சென்னை அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில்,2017 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து 636 குழந்தைத் திருமணங்கள் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதில் 75 சதவித திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல, 52 சதவிகித திருமணங்கள் குழந்தைகளின் ஒப்புதலின்றி நடத்தப் பட்டவையாகும். திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டவர்களின் வயது சராசரியாக 16 வயதாக இருந்திருக்கிறது.
மணவயதை எட்டும் முன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பொருளாதார நெருக்கடிக்காக 33 சதவிதம் பேருக்கும், காதல் திருமணம் செய்துகொள்வதை தவிர்ப்பதற்காக 17% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக 11% பேருக்கும், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை காரணமாக கருதி 11% பேருக்கும், காதலித்து திருமணம் செய்ததாக 95% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரித்ததால் 1% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?