இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் நடந்த மோதல், நடுவரின் எச்சரிக்கையால் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள் மற்ற அணி வீரர்களை கேலி, கிண்டல் செய்வதில் வல்லவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத் துக்குப் பிறகு இந்த கிண்டல், கேலி கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி யில் மீண்டும் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிவிட்டனர்.
பெர்த்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் 3-வது நாளில் பும்ரா வீசிய பந்து, டிம் பெய்னின் பேட்டை உரசியது போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் கையில் தஞ்சம் அடைந்தது. உடனே விராத் கோலி அவுட் கேட்டார். நடுவர் வழங்கவில்லை. அப்போது விராத்- டிம் பெய்ன் இடையே வாக்குவாதம் நடந்தது. அது நான்காவது நாளான நேற்றும் தொடர்ந்தது.
71-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது பெய்னின் அருகில் பீல்டர்களை நிறுத்தினார் விராத். உடனே டிம் பெய்ன், விராத் திடம் ஏதோ சொல்ல, இருவருக்கும் வார்த்தை மோதல் மீண்டும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் நெருங்கியபடி நின்று கொண்டு மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் பேசிக்கொண்டது ஸ்டம்பில் பொருத்தப்பட்டி ருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. ’’நீங்கள்தான் நேற்று பொறுமை இல்லாமல் பேசினீர்கள். இன்று அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்’’ என்றார் பெய்ன்.
இதைக் கண்ட நடுவர் கிறிஸ் கஃபானே தலையிட்டு ‘’போதும். விளையாடுங்கள்’’ என்றார். உடனே, ’’நாங்கள் சும்மா பேசி கொண்டுதான் இருக்கிறோம். சண்டையிடவில்லை’’ என்றார் பெய்ன். பின்னர், ‘’நீங்கள் கேப்டன். மறந்துவிடாதீர்கள்’’ என்றார் நடுவர். பின்னர் விராத் கோலி ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார். லெக் அம்பயர் தர்மசேனா, அவரை எச்சரித் தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் கூறும்போது, ‘’இப்படி மோதலில் ஈடுபடுவது ஆரோக்யமான போட்டியை உருவாக்கும். இந்திய வீரர்கள் என்ன தோன்றுகிறதோ, அதை செய்யட்டும். நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்கி றோம்’’ என்றார்.
முன்னாள் சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையில் கூறும்போது, "விராத் கோலி தனது கோபத்தை குறைத்துக்கொண்டு விளையாடுவது அவசியம்" என்றார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?