சென்னையில் ஒன்றாக மது அருந்தியவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி, திருவிக நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த 14ஆம் தேதி வீட்டின் அருகே மயக்கமான நிலையில் படுகாயத்துடன் கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவிக நகர் காவல்துறையினர், படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த விக்னேஷிடம் விசாரித்தனர்.
அந்த விசாரணையில், தனது நண்பர்கள் அமானுல்லா, முபாரக், ராஜவேல் ஆகியோருடன் கடந்த 13ஆம் தேதி ஒன்றாக மது அருந்தியதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமானுல்லா மற்றும் 2 பேர் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அமானுல்லா, முபாரக், ராஜ்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை கொலை வழக்காக திருவிக நகர் காவல்துறையினர் பதிவு செய்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'