ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், நீதி வெல்வது எப்போது என அவரின் தாய் அற்புதம்மாள் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், மகன் பேரறிவாளன் பரோலில் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்ததைக் குறிப்பிடும் வகையில், விடுப்பில் வந்தான் மகிழ்ந்தோம் எனத் தெரிவித்துள்ளார். விடைபெற்று சென்றான் 'உடைந்தோம்' என்று தெரிவித்துள்ள அற்புதம்மாள், வழியும் கண்ணீர் விழிகளோடு அவன் விடுதலைக்கு காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
நீதி வெல்வதெப்போ...?
விடுப்பில் வந்தான் "மகிழ்ந்தோம்"
விடைபெற்று சென்றான் "உடைந்தோம்"
வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம்
அவன் "விடுதலைக்கு!"#28YearsEnoughGovernor pic.twitter.com/MpTH4cMHLc — Arputham Ammal (@AmmalArputham) December 17, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைடைந்தும், தமிழக ஆளுநர் அந்தத் தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதி வெல்வது எப்போது என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?