கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாகர்கோவிலில் 114 கோடி ரூபாய் மதிப்பில் "Y" வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம், 54 தூண்களின் மேல் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக மேம்பாலத்தில் பேருந்து நிறுத்த வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் மார்த்தாண்டத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்திலும் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த இரண்டு பாலங்களிலும் வரும் 19ம் தேதி முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர் மீதமுள்ள கட்டுமானபணிகள் முடிவடைந்த பின்னர் விரைவில் திறப்பு விழா நடத்தப்படும் எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்