பதவிக்காகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலின் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே திமுகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில்பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு வருத்தமிருந்திருக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், பதவிக்காகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் டிடிவி தினகரனை முதல்வராக்குவேன் என்று சொன்ன செந்தில்பாலாஜி தற்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என கூறுவதாகவும் டிடிவி தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு எனவும் தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்