ஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி

ஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி
ஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா
அனுமதிக்கப்பட்டார்.

75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அவர் காலமானார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்
உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்
பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சிலை அருகே தொடங்கி வாலாஜா சாலை வழியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி நடத்துகின்றனர்.
இந்த பேரணியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com