18 வயதுகூட நிறைவடையாத மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்திய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அந்த மாணவி பிஎஸ்சி நர்சிங்க் படிக்க 3 லட்ச ரூபாய் நிதி உதவியும் ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலை பார்வதி அகரம் கிராமத்தைச் சார்ந்த வித்யா கடந்த மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியை சந்தித்தார். சந்திப்பில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை எனவும், திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்து திருமணத்தை நிறுத்த உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
(மாவட்ட ஆட்சியர் கந்தசாமி)
வித்யாவை தனது அலுவலகத்தில் அமரவைத்து அவரின் விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், வித்யாவின் அம்மாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் உங்கள் பெண் பத்திரமாக உள்ளார் என்றும், 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்த அறுவுறுத்தினார்.
அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாணவி நர்சிங் படிக்க விரும்பியதால் 3 லட்ச ரூபாய் நிதி உதவியும் ஏற்பாடு செய்துள்ளார்
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!