சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைக் கடுமையாக தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதி மக்கள் வீடு உடைமைகளை இழந்து கடும் சேதத்திற்கு ஆளாகினர்.
உணவு உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்தப் புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள், வனவிலங்குகள் இறந்துள்ளன.
இதையடுத்து மத்திய அரசிடம் இருந்து காரைக்காலுக்கு ரூ. 187 கோடி நிவாரணம் கோர உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லி சென்ற நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புயல் சேதத்துக்கு ரூ. 187 கோடி நிவாரணம் வழங்க கோரியும் காரைக்காலை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் 26-ந்தேதி காலை மத்தியக்குழுவினர் காரைக்காலில் கஜா புயல் சேதங்களை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதற்கு பின் அன்று மாலை அவர்கள் புதுச்சேரி வர உள்ளதாகவும் அப்போது போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.187 கோடி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்