தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, தனது பிறப்புறுப்பை தானே அறுத்து எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, இடுக்கி, வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயது தந்தை ஒருவர் தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பீர்மேடு சிறைச்சாலையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தார்.
செவ்வாய்கிழமை தோறும் கைதிகள் தங்களை முகச்சவரம் செய்து கொள்வதற்கு சிறை அதிகாரிகள் பிளேடு கொடுப்பது வழக்கம். அதே போல் நேற்றும் அதிகாரிகள் கைதிகளிடம் பிளேடு கொடுத்துள்ளனர்.
அப்போது, போஸ்கோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென பிளேடை வைத்து தனது பிறப்புறுப்பை தானே அறுத்து சிறை வளாகத்திற்கு வெளியே எறிந்துள்ளார்.
இதைப்பார்த்த மற்ற கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கைதியை மீட்டு உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு தன்னை யாரோ இந்த வழக்கில் சிக்க வைக்க பார்ப்பதாக சக கைதிகளிடம் அவர் கூறியுள்ளதாகவும் குற்ற மனப்பான்மையால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!