டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்!

டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்!
டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்!

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி கூடுதல் வலுப்பெறும் என்பதால் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வும் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20, 21ஆம் தேதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com