ஓடும் ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள கும்பலின் தலைவன் மொஹர் சிங், திட்டமிட்டு திருடியது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓடும் ரயிலை துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கொள்ளை குறித்து கொள்ளையர்களின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை அடிக்கும் முன்பு விருத்தாசலம் - அயோத்திபட்டிணம் வரை ஒரு வாரம் ரயிலில் பயணித்ததாக மொஹர் சிங் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ரயில் நிற்கும் இடம், மெதுவாக செல்லும் இடம் ஆகியவற்றை கண்காணித்து சின்னசேலத்தில் ரயில் என்ஜின் மீது ஏறி பணம் இருந்த பெட்டிக்கு சென்றாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இயந்திரத்தின் உதவியுடன் ரயிலை துளையிட்டு 6 லுங்கிகளில் கையில் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் மொஹர் சிங் கூறியுள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்