சுரேஷ் கல்மாதி, அபய் சவுதாலா ஆகியோரை வாழ்நாள் தலைவர்களாக நியமித்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
சுரேஷ் கல்மாதி, அபய் சவுதாலா ஆகியோர் கவுரவ வாழ்நாள் தலைவர்களாக நியமிக்கப்படுவதாக சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள கல்மாதி மற்றும் சவுதாலாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், வாழ்நாள் தலைவர்கள் தொடர்பான நியமனம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கவுரவத் தலைவர்கள் குறித்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!